• Breaking News

    போர் கப்பலில் தீ விபத்து

     உத்தர கன்னடாவின் கார்வாரின் கதம்பா கடற்படை தளத்தில் ஐ.என்.எஸ்., விக்கிரமாதித்யா போர்க் கப்பலில் சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடந்தன. 

    இந்த பணிகள் முடிந்ததை அடுத்து நேற்று முன்தினம் கதம்பா கடற்படை தளத்தில் இருந்து அரபி கடல் வழியாக கப்பல், மும்பை சென்று கொண்டிருந்தது.பாதி வழியில் கப்பலில் தீப்பிடித்தது.உடனடியாக ஊழியர்கள் தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கப்பலில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்த கப்பலில் மூன்று ஆண்டுகளுக்கு முன் சிலிண்டர் வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மீண்டும் அதே கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    No comments