டிஎன்பிஎல் 2025 கிரிக்கெட்..... ஜூன் 5-ம் தேதி தொடக்கம்
தமிழக கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை பட்டம் வென்றுள்ளது.
இதன் 9-வது சீசன் வருகிற ஜூன் 5-ம் தேதி தொடங்கி ஜூலை 6-ம் தேதி அவரை நடைபெறுகிறது. இதில் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. அதே மைதானத்தில் ஜூன் 6-ந்தேதி நடக்கும் 2-வது லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருப்பூர் தமிழன்சுடன் மோதுகிறது. கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் நத்தம் ஆகிய 4 இடங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது. மகுடத்துக்கான இறுதிப்போட்டி ஜூலை 6-ந்தேதி திண்டுக்கல்லில் அரங்கேறுகிறது.
இந்நிலையில் கோவை, சேலம் பகுதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. நெல்லையில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை வருகிற 10-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments