ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே அனுமதி : கலெக்டர் உத்தரவு
வேலுாரில் ஆட்டோக்களில், இரண்டு பேருக்கு மேல் ஏற்றிச் செல்ல தடை விதித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வேலுார் மாவட்டத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து, இரண்டு பேருக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது. வாடகை மற்றும் கார்களில் டிரைவர் தவிர்ந்து மூன்று பேர் மட்டும் செல்லலாம். பூங்காக்கள், அருங்காட்சிகங்கள், பெரிய அரங்குகள் மூடப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர், இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டும் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments