ஜெயிலில் இருப்பதே நல்லது ரவுடி பேபி சூர்யாவுக்கு டிக்டாக் திவ்யா அறிவுரை
யூடியூபில் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர் சமீப காலமாக ஆபாசமாக பேசி வருவதாக புகார்கள் எழுந்தன. அந்தவகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பெயரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சூர்யாவுக்கு எதிரான நடவடிக்கை எடுத்துள்ளனர். மதுரையில் தலைமறைவாக இருந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.இந்த நிலையில் கார்த்திக்கை தேடிக் கொண்டிருந்த டிக்டாக் திவ்யா, ரவுடி பேபி சூர்யா குறித்து வீடியோ பதிவு ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “ எனக்கும் உங்களை போல் ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர். மூன்று முறை ஜெயிலுக்கு சென்று விட்டு தற்போது எவ்வளவு ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். சூர்யா அக்கா நீங்கள் நல்ல நாளில் ஜெயிலுக்கு போயுள்ளீர்கள். நீ அங்கையே இருந்துகோ அக்கா. வெளியே வந்தால் நமக்கு வீடு தர மாட்டார்கள் . எனவே ஜெயிலில் இருப்பது தான் நல்லது” என தெரிவித்துள்ளார்.அது மட்டுமல்லாமல் புதன்கிழமை தேங்காய் சோறு, ரசம் உட்பட வாரத்தில் என்ன உணவுகள் கிடைக்கும் என்றும் திவ்யா கூறியுள்ளார். “வாரத்தில் ஒருநாள் பெரிய உருளைக்கிழங்கு உருண்டை ஒன்றையும் தருவார்கள். ஆனால் சென்ட்ரல் ஜெயிலில் தான் அதிகமாக உணவு கிடைக்கும். சப் ஜெயிலில் சற்று குறைவாக தான் கிடைக்கும். ஆனால், உங்களுக்கு பதினைந்து நாளில் பெயில் கிடைத்து விடும். கண்டிப்பாக வெளியே வருவீர்கள்” எனவும் திவ்யா தெரிவித்துள்ளார்.
மேலும், “ஆனால், வெளியே வந்தால் என்னை மாதிரி கஷ்டப்பட வேண்டியது இருக்கும். ஜெயிலில் இருப்பதே நல்லது” எனவும் டிக்டாக் சூர்யாவிற்கு திவ்யா அறிவுரை கூறியுள்ளார்.
No comments