பல பேர் வாழ்க்கையில் விளையாடிய நடிகை விஜயலட்சுமி......
‘லேட்டஸ்ட்டா எனக்கு கிடைத்த தகவல், அவருக்கு 10 லட்சம் கொடுத்துவிட்டார்கள். அவர் சத்தமில்லாமல் பெங்களூரு போய்விடுவார்’
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்துள்ள நடிகை விஜயலட்சுமி குறித்து நடிகர், நடிகளை விமர்சிக்கும் பயில்வான் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி
இதோ:‘‘பல பேர் வாழ்க்கையில் விளையாடிய நடிகை விஜயலட்சுமி, மீண்டும் சீமானிடம் வால் ஆட்டுகிறார். வெள்ளைத் தோல், அரேபிய குதிரை போல உயரம், எடுப்பான கண்கள், பிரம்மன் ஓய்வில் இருந்த போது படைத்த அழகி விஜயலட்சுமி.
கன்னடம், தமிழில் சில படங்களில் நடித்தார். சீரியலிலும் நடித்தார். இவருக்கு வேலையே, பிரபல நடிகர்களிடம் போக வேண்டியது, உல்லாசமாக இருக்க வேண்டியது, அவர்களிடம் பண உதவி பெற வேண்டியது, பிறகு பணம் கேட்டு மிரட்டுவது, போலீசில் புகார் செய்வது இது தான்.
இவர் யார் வாழ்கையில் விளையாடியிருக்கிறார் என்பதை பார்த்துவிட்டு, பின்னர் விஜயலட்சுமி முகத்திரையை டார் டார் என கிழிப்போம். 2006 ம் ஆண்டு கன்னட இயக்குனர் ரமேஷ் உடன் உறவாடினார். அவருடன் ஆட்டம் போட்ட பிறகு, அவர் பற்றியே போலீசில் புகார் செய்தார்.
இரண்டாவது, 2007 ம் ஆண்டு கன்னட நடிகர் சுர்ஜூன் உடன் உறவில் இருந்தார். அவரிடம் சில லட்சங்களை பெற்றுக் கொண்டு, அவர் மீதே பெங்களூரு போலீசில் புகார் செய்தார். 2010 ம் ஆண்டு தான் செந்தமிழன் சீமானிடம் வந்தார். இருவரும், ஒரே வீட்டில் வாழ்ந்தது உண்மை. அவர், விஜயலட்சுமி சொல்வது போல, அவர்கள் வாழ்ந்ததை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் விஜயலட்சுமியின் தில்லுமுல்லு விசயங்களை அறிந்த பின் சீமான் ஒதுங்கிக் கொண்டார். 2014 ம் ஆண்டு மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி, சிகிச்சைக்கு சேர்ந்தார். அப்போது தான் கன்னட நடிகர் ரவிபிரகாஷிற்கு தொடர்பு ஏற்பட்டது. அய்யோ பாவம் என்று அவர் உதவியிருக்கிறார். அவரிடம் சில லட்சங்கள் பெற்ற பின், அவர் மீதே போலீசில் புகார் செய்தார்.
2021 ம் ஆண்டு நடிகர் ஜெகதீஷ் உடன் பழகி வாழ்ந்து வந்தார். அதன் பின் அவர் பற்றி போலீசில் புகார் செய்தார். இப்போ மறுபடியும் சீமானிடம் வந்துள்ளார். அவர் என்ன சொல்றாரு, ‘சீமான் என்னை 7 முறை கருக்கலைப்பு செய்தார்’ என்கிறார்.
அவர் சொன்னது இருக்கட்டும், நீ ஏன் செய்தாய்? உன் மூளை எங்கே போச்சு? கருக்கலைக்க அவர் எவ்வளவு பணம் கொடுத்தார்? அதை சொல்லவே இல்லையே. ஒவ்வொருமுறையும் சென்னை வந்து பெங்களூரு போகும் போது, 10 லட்சம் ரூபாய் இல்லாமல் போகமாட்டார்.
‘எங்க அக்கா சாகப்போறா’ என்ற ஒரே டயலாக்கை சொல்லி, எல்லாரிடமும் பணம் வாங்கியிருக்கிறார். சீமானுக்கு திருமணம் நடந்த போது, ஏன் இங்கே வந்து திருமணத்தை நிறுத்தவில்லை? அப்போ பணத்தை வாங்கிக் கொண்டு அமைதியாகிட்ட அப்படி தானே? சீமானை நான் நல்லவனாக சித்தரிக்க விரும்பவில்லை. அவர்கள் பழகியது எல்லாம் உண்மை தான். ஆனால், நீ கொடுத்த புகாரை, நீயே வாபஸ் வாங்கிட்டு, இப்போ 10 ஆண்டு கழித்து மறுபடி அந்த புகாரை விசாரிக்க சொல்வது ஏன்?லேட்டஸ்ட்டா எனக்கு கிடைத்த தகவல், அவருக்கு 10 லட்சம் கொடுத்துவிட்டார்கள். அவர் சத்தமில்லாமல் பெங்களூரு போய்விடுவார்,’’
என்று அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
(இவை அனைத்தும் பயில்வான் ரங்கநாதனின் தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே)
No comments