சாதனைத் தமிழருக்கு மலேசிய மண்ணில் பாராட்டு விழா நடைபெற்றது
கோலாலம்பூர் தலைநகர் காஜாங் வட்டாரத்தில் லண்டன் தமிழ் சேவையாளரும் தமிழ்ச் சங்கத் தலைவருமான அப்பு சீனிவாசன் தாமோதரனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.காஜாங் ஓரியன்டல் கிரிஸ்தல் நட்சத்திர தங்கும் விடுதியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சென்னையில் பிறந்து ஐரோப்பிய நாட்டிற்குச் சென்று சமூகம் மற்றும் அரசியலில் சாதனைப் பதித்த தமிழர் லண்டன் க்ரைடோன் நகரில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு தன்னலமற்ற மக்கள் சேவையாற்றும் சேவையாளரும் லண்டன் Labour Party தலைவரும்,லண்டன் தமிழ்ச் சங்கத் தலைவரும்,லண்டன் எம்.ஜி.ஆர் மன்ற தலைவரும், லண்டன் உலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவருமாகிய தமிழ்ச்சங்கத் தலைவரும் லண்டன் க்ராய்டன் நகரத்தின் துணை மேயருமான அப்பு சீனிவாசன் தாமோதரனுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் கலைமாமணி முத்து ரத்தினம், எம்ஜிஆர் பாலன் இருவரும் இணைந்து பொன்னாடை அணிவித்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கௌரவித்தனர்.
இதே மேடையில் மக்கள் திலகத்தின் நடை, உடை, பாவனையில் உள்ள நடிகர், இயக்குநர் நாமக்கல் எம்ஜிஆர் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கௌரவிக்கப்பட்டது.இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் டத்தோ கோபால் கிருஷ்ணன், P.L.A. ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழில் முனைவோர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு விழா ஏற்பாட்டாளர்களால் சிறப்பு செய்யப்பட்டது. இப்பாராட்டு விழா காஜாங் நகரில் ஓரியன்டல் கிரிஸ்தல் நட்சத்திர தங்கும் விடுதியில் பாராட்டு விழாவும் விருந்தோம்பலுடன் இசை நிகழ்ச்சியும் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.இவ்விழாவில் முதல் அங்கமாக டிஎம்எஸ் மகேந்திரனின் தமிழ் வாழ்த்தோடு, விழாவின் ஒருங்கிணைப்பாளர் எம்ஜிஆர் பாலன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் ஏற்பாட்டு தலைமையாளர் சேவைதிலகம் டத்தோ டாக்டர் முத்து ரத்தினம் தலைமையுரை வழங்கினார்.இப்பாராட்டு விழாவில் பாடகர் டிஎம்எஸ் மகேந்திரன், பாடகர் மேகநாதன், பாடகி விஜயசாந்தி, ஒலி ஒளி ரமேஷ் ஆகியோருடன் டாக்டர் புருஷோத்தமன் இன்னிசையில் எம்ஜிஆரின் பல்வேறுப்பட்ட இனிமையான தத்துவம், காதல், எழுச்சி பாடல்கள் பாடி நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.விழா வெற்றி அடைவதற்கும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அனைவருக்கும் நெகிரி தமிழ் மன்றம், டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கம் மற்றும் மலேசிய சலாம் கலாம் பசுமை மேலாண்மை சார்பாக ஏற்பாட்டு தலைமையாளர் சேவை திலகம் டத்தோ டாக்டர் முத்து ரத்தினம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எம்ஜிஆர் பாலன் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments