• Breaking News

    மதுரை மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி ஆணையருக்கு சமூக ஆர்வலர் அசோக்குமார் வேண்டுகோள்

     மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு சமூக ஆர்வலர் க.அசோக் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளதாவது:

         சமூக ஆர்வலர் க.அசோக் குமார்

    கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிக அளவில் பரவி வரும் இந்த இக்கட்டான வேலையில், தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்த சூழலில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில். 



    ஒவ்வொரு தனி மனிதனும் தனது வாழ்வாதாரம் மற்றும் தனது பாதுகாப்பு என இயந்திரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிலையில், மதுரையில் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் மருத்துவ உதவி வேண்டுவோர்,ஆதரவு இல்லாத முதியோர், மனநிலை பாதிக்கப்பட்டு சாலையில் அலைவோர், வீடற்ற வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் மக்களுக்கும், இவர்களை போன்றோருக்கும், எவரேனும் யாசகம் செய்தால் மட்டுமே இந்த உயிர்களை கொரோனா தொற்று மற்றும் பசியிலிருந்து காத்திட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    No comments