அறந்தாங்கி அருகே பனை மரம் வெட்டிய நபர்களுக்கு நாம் தமிழர் கட்சி அறிவுரை
அறந்தாங்கி அருகே பனை மரம் வெட்டி ஏற்றிய நபர்களை தடுத்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்த நாம் தமிழர் கட்சி இயக்கத்தினர் விவசாயத்தை காப்பதே எங்களது முதல் நோக்கம் எனக் கூறி தடுத்து நிறுத்தம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பஞ்சாயத்து கிராமத்தில் மரம் வெட்டுவதாக வந்த தகவலின் அடுத்து நாம் தமிழர் இயக்கத்தினர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று மரம் வெட்டி லாரியில் ஏற்றுவதை நிறுத்தி மீட்டும் ஏற்றிய கட்டைகள் எல்லாம் அதே இடத்தில் போட சொல்லி அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பப்பட்டனர். இது சம்பந்தமாக தாலுகா ஆபீஸ் மற்றும் உதவி சப் கலெக்டரிடம் தகவல் தெரிவித்தனர் பின்பு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறிய தகவலை அடுத்து நாம் தமிழர் இயக்கத்தினர் கலைந்து சென்றனர்.
No comments