பத்மஸ்ரீ விவேக் நினைவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் விளாங்காடு கிராமம் பத்மஸ்ரீ விவேக் நினைவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது மேலும் இந்நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மாநில தலைவர் ஜெயராஜ் தாமரை மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் துணைத் தலைவர் பிரபாகரன் நிகழ்ச்சியின் தலைமை தாங்கினார். ஜெயபிரகாஷ் செல்வகுமார் முன்னிலையில் அப்துல்கலாம் ஐயாவின் இலக்கை நோக்கி மரக்கன்றுகளை நட உறுதி மொழி எடுத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் அறக்கட்டளையின்நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு மரங்கள் நடப்பட்டது.
செய்தியாளர் S.பெரியதுரை
No comments