• Breaking News

    போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூர் சிஎஸ்ஐ பிஷப் சாலமன் துரைசாமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது


    தமிழக அரசு அறிவித்துள்ள போதைக்கு எதிரான விழிப்புணர்வு தமிழக முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது.


    இந்த நிலையில் கரூர் சிஎஸ்ஐ பிஷப் சாலமன் துரைசாமி கலை அறிவியல் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரேமாநாதன் அவர்கள் தலைமையில் கொடியை சேர்த்து வைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அரசு, தனியார் பள்ளி மாணவ மாணவிகள் சைக்கிளில் பதாகைகள் ஏந்தி போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கல்லூரியில் இருந்து தொடங்கி ஜவகர் பஜார்,கரூர் பேருந்து நிலையம், திண்ணப்பா கார்னர் போன்ற முக்கிய சாலைகளில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு  ஏற்படுத்தினார்கள்.


    கரூர் மோகன் ராஜ்.

    No comments