குழந்தைகளுடன் பெற்றோர்களும் ஓடிய கிட்ஸ் மாரத்தான் ஓட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஜி குளோபல் ஸ்கூல் சார்பில் 2 வயது முதல் 12 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த க கிட்ஸ் மாரத்தான் நடைபெற்றது.2 வயது முதல் 5 வரை வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 400 மீட்டர் கிட்டாத்தான் ஓட்டப் பந்தயம் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதே போல் ஆறு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான ஆண்கள் பிரிவில் இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓட்டப்பந்தயம் மற்றும் பெண்களுக்கான 2 கிமீ ஓட்டப் பந்தயம் ஈரோடு ரோட்டில் உள்ள பள்ளியின் எதிரில் இருந்து துவங்கப் பட்டது. போட்டிகளை குளோபல் பள்ளியின் தலைவர் இயக்குநர் டாக்டர் குணசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குழந்தைகளின் உடல் வலிமை மற்றும் மன வலிமையை மேம்படுத்தும் வகையிலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த கிட்ஸ் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது, இதில் பிரிவு 1-ல் 2 முதல் 5 வயதுக்குட் பட்ட மலழைகள் கலந்து கொண்ட 400 மீ தூரஓட்டம், பிரிவு 2 மற்றும் பிரிவு 3 -ல் 6 முதல் 12 வயதுக்குட் பட்ட மாணவிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட 2 கி.மீ தூர போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில் நாமக்கல் ஈரோடு, குமாரபாளையம், சேலம், ராசிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளி லிருந்து சுமார் 500 குழந்தைகள் பங்கேற்றனர் . இந் நிகழ்ச்சியில் குளோபல் பள்ளியின் தலைவர் இயக்குநர் டாக்டர் குணேசகரன், நிர்வாக இயக்குனர் டாக்டர் வெற்றிச்செல்வன், பள்ளியின் இயக்குநர் டாக்டர் ரோஷ்னி வெற்றிச் செல்வன், யங் இண்டியன்ஸ் ஈரோடு சேப்டர் உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். பிரிவு 1-ல் ஆபியா சுல்தானா, முதலிடம் பெற்று ரூ 3000 /- க்கான காசோலையையும், M.புகழ் இரண்டாமிடம் பெற்று ரூ 2000 /- க்கான காசோலையையும் பெற்றனர். மாணவிகளுக்கான பிரிவு 2-ல் N. ராகினி முதலிடம் பெற்று ரூ3000/- க்கான காசோலையையும், V.தக்க்ஷா ஸ்ரீ இரண்டாமிடம் பெற்று ரூ2000 /- க்கான காசோலையையும் பெற்றனர். மேலும் மாணவர்களுக்கான பிரிவு 3-ல் S. அக்க்ஷித் முதலிடம் பெற்று ரூ 3000/- க்கான காசோலையையும்,E.தீபன் இரண்டாமிடம் பெற்று ரூ2000 /- க்கான காசோலையையும் பெற்றனர்.
போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்கைள பெற்ற குழந்தைகளுக்கு பதக்கங்கள் , கேடயங்கள், காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. போட்டியாளர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் மற்றும் பங்கேற்பு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.சிறு குழந்தைகளுடன் பெற்றோர்களும் கிட்ஸ் மாரத்தான் போட்டியில் ஓடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
ஜெ ஜெயக்குமார் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம் 9942512340
No comments