தமிழகத்தில் 5 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கர்நாடகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தமிழகத்தில் 5 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய கர்நாடகத்தைச் சேர்ந்த நபர்கள் சென்னையில் தங்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை மண்ணடி உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments