• Breaking News

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபி ஜெயக்குமார் மாயம்

     

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரான கேபி ஜெயக்குமாரை காணவில்லை என்று அவரது மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு கே.பி. ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

    தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் ஜெயக்குமார் போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில், அவர் மாயமாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேபி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    No comments