செங்கோட்டையில் நாளை பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் தேர்வு போட்டி நடைபெறுகிறது
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தென்காசி மாவட்டம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தென்காசி மாவட்டம் விருட்சம் கல்வி & தொண்டு அறக்கட்டளை மற்றும் அட்வகேட் மிரர் மாத இதழ் இணைந்து நடத்தும் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவிலான இளம் விஞ்ஞானிகள் (Young Scientist) தேர்வு போட்டி நாளை காலை 9:30 மணிக்கு செங்கோட்டை தாலுகா வல்லம் பகுதியில் உள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் நடைபெறுகிறது.
6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் இப்போட்டியில் ஒரு பள்ளிக்கு மூன்று மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியுமாம். போட்டியில் பங்குபெறும் மாணவர்கள் மட்டுமின்றி அழைத்து வரும் ஆசிரியர்கள் பங்குபெறும் பள்ளிகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் சீல்டு மற்றும் மரக்கன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குபெறும் அனைவருக்கும் மதிய உணவு குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என்னென்ன தலைப்புகளில் பங்கு பெறுவது என்பதை அறிந்து கொள்வதற்கும், முன்பதிவுக்கும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணிற்கு இன்றே அழைக்க வேண்டியது அவசியம். தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 6384088001 / 9962245224.
No comments