பல்லாவரம் தெற்கு பகுதி 10 வது வார்டு திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு நலதிட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கபட்டது
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் தெற்கு பகுதி 10 வது வார்டு திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் மாணவர்களுக்கு நலதிட்ட உதவி வழங்கும் விழா தாம்பரம் மாநகராட்சி 10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மதினாபேகம் தலைமையில் வட்டகழக செயலாளர் முகமது அப்பாஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி மற்றும் மணடல குழுத் தலைசரும், தெற்கு பகுதி செயலாளருமான வே.கருணாநிதி கலந்து கொண்டு கழககொடியேற்றி இனிப்புகள் வழங்கியும், 10 ஆம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கியும் இதனை தொடர்ந்து ஏழை எளிய மக்கள் 300 க்கும் மேற்பட்டோருக்கு அறுஞ்சுவை பிரியாணி வழங்கி வெகு விமர்சியாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு 10 வது வார்டு பகுதி நிர்வாகிகள் மற்றும் மகளிரணி உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
No comments