காரைக்கால்: குட்ஷெப்பர்டு ஆங்கிலப் பள்ளியில் பன்னாட்டு யோகா தினம் சிறப்பாக நடைபெற்றது
காரைக்கால் : குட்ஷெப்பர்டு ஆங்கிலப் பள்ளியில் 21.06.2025 சனிக்கிழமை காலை 8 மணியளவில் பன்னாட்டு யோகா தினம் சிறப்பாக நடைபெற்றது.இவ்வேற்பாட்டினை பள்ளியின் தாளாளர் ரான்சன் தாமஸ் முதல்வர் டாக்டர். ஜாய் தாமஸ் சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் சூர்யநமஸ்காரம் , பத்மாசனம் , புஜங்காசனம் , தனுராசனம் , விருட்சாசனம் , அர்த்த சக்ராசனம் முதலிய ஆசனங்கள் இடம்பெற்றிருந்தன.இதில் பள்ளி மாணவ மாணவிகளும்,ஆசிரியர்களும் பங்கேற்று பயனடைந்ததோடு மட்டுமின்றி யோகாவின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தினர்.
மேலும் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக சுமார் 700 மாணவ மாணவிகள் மனித சங்கிலி அமைத்து யோகாவின் சின்னத்தை வடிவமைத்தனர் .
No comments