முதுகுளத்தூரில் அதிமுக சார்பாக எம்ஜிஆரின் 38வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது


இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அஇஅதிமுக சார்பாக எம்.ஜி.ஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் மற்றும் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.டி செந்தில்குமார் (மத்திய ஒன்றியம் )கே.கர்ணன் (மேற்கு ஒன்றியம்) ஆகியோர் தலைமையில் முன்னாள் எம் எல் ஏ. மலேசியா பாண்டியன், சண்முகபாண்டியன் (கழக விவசாய அணி துணை செயலாளர்) முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட எம் ஜி ஆர் படத்திற்கு பூஜை செய்து தேங்காய் உடைத்து வழிபட்டனர். 

நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் எஸ். கதிரேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெங்களகுறிச்சி ராஜசேகர் |நகர் அவைத்தலைவர் கருப்பசாமி,  செல்லையா, மாவட்ட எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர்  கண்ணன் உள்பட அதிமுகவினர் திரளாக கலந்துகொண்டு பஸ் நிலையம் மற்றும் பஜாரில் மெளன அஞ்சலி ஊர்வலம் சென்றனர்.

Post a Comment

0 Comments