நாகையில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணக்கட்டை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பெண் போஸ்ட்மெனுக்கு குவியும் பாராட்டுக்கள்


நாகப்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வைரமுத்து இவரது மனைவி 30 வயதான பவித்ரா இவர் நாகப்பட்டினத்தில் போஸ்ட்மேன் ஆக பணியாற்றி வருகிறார்.இன்று பணிக்குச் சென்று   ஐயப்பன் கோவில் பகுதி அருகே உள்ள பென்டகன் மருத்துவமனை எதிரே சாலையில் ரூ.50,000 கட்டு விழுந்து கிடந்ததைக் கண்ட  பவித்ரா நாகப்பட்டினம் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

 அதன்படி காவல் நிலையத்தில் ஒப்படைக்க காவலர்கள் கூறியுள்ளனர் அதன்படி 50 ஆயிரத்தை காவலர்களிடம் ஒப்படைத்தார்  1 வாரம் சட்டையப்பர் மேலவீதி பகுதியில் 1 சவரன் தோடை காவல்துறையினர் மூலம் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த செயலை செய்த பெண் போஸ்ட்மெனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

செய்தியாளர்: ஜி. சக்ரவர்த்தி 

Post a Comment

0 Comments