அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மரம் நடும் பசுமை விழா நடைபெற்றது


அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி,தமிழ்நாடு வனத்துறை,அரியலூர் வனக்கோட்டம் சார்பில்,பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிட் இணைந்து நடத்தும்,மரம் நடும் பசுமை விழாவினை முன்னிட்டு,மாவட்ட ஆட்சித் தலைவர்  பொ.இரத்தினசாமி , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் ஆ.ரா.சிவராமன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது ) பரிமளம்,ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள்,வனத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments