தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ரேபிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


 தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து  தெருநாய்கள், ஒரு சமூகப் பொறுப்பு, ரேபிஸ் இறப்புகளை ஒழித்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சியில் கால்நடை பொது சுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல், ஆலோசகர் டாக்டர் தீபன், கால்நடை ஆலோசகர் பாவ்ஸ் ட்ரீட் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். 

 தெரு நாய்களின் பொதுவான நடத்தை, ஆக்ரோஷமாக  நடந்து கொள்ளக் காரணமான அம்சங்கள் மற்றும் தெரு நாய்களுடன் நேரிடும் சந்திப்புகளால் ஏற்படும் கடுமையான உடல் நல அபாயங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், தெருநாய்களுடன் பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான முறையில் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினர். 

ரேபிஸ் என்பது பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நாயின் கடி அல்லது கீறல் மூலம் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் அது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்றும் டாக்டர் தீபன் விளக்கினார். தெருநாய்களைக் கையாளும் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து விரிவாகக் கூறினார். மேலும், இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதில் பொறுப்புள்ள குடிமக்களின் பங்கு மிக முக்கியமானது என்பதையும் விளக்கி தெருநாய் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தல், கருத்தடை நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புள்ள சமூக பங்கேற்பு ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தாா்.

Post a Comment

0 Comments