ராணிப்பேட்டை அருகே லாரி மீது கார் மோதி புதுப்பெண் பலி

 


கிருஷ்ணகிரி மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்த நவீன் (வயது 23), பெற்றோர் எதிர்ப்பை மீறி சத்யா(19) என்ற இளம்பெண்ணை 2 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். பின்னர் இந்த தம்பதியினர் சென்னையில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த தம்பதியரை பெற்றோர் சமரசமாக அழைத்ததால் நேற்று அதிகாலை சொந்த ஊருக்கு காரில் சென்றனர். அப்போது ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே சென்னசமுத்திரத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சத்யா உயிரிழந்தார். நவீன் லேசான காயமடைந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments