முதல்வர் காலில் விழுந்து வணங்கிய மாவட்ட ஆட்சியர்கள்

 சித்திபேட்டை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். அப்போது அந்த மாவட்டத்தின் ஆட்சியர் வெங்கடராம் ரெட்டி, முதல்வர் சந்திரசேகர ராவின் கால்களை தொட்டு வணங்கினார்.



மாநில தலைமைச் செயலர் சோமேஷ் குமார் உள்ளிட்ட பல மூத்த அரசு அதிகாரிகளுக்கு முன்னிலையில், முதல்வரின் கால்களை ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தொட்டு வணங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் அதுகுறித்து ஆட்சியர் வெங்கடராம் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.அதில் முதல்வர் தனக்கு தந்தையைப் போன்றவர், விசேஷமான நாட்களில் பெரியவர்களிடம் ஆசி பெறுவது கலாசாரம் என குறிப்பிட்டுள்ளார்.



அதனால் புதிய அலுவலகத்தில் பொறுப்பேற்பதற்கு முன், அவரிடம் ஆசி பெற்றேன் என தெரிவித்துள்ளார். இதே போல் கமரெட்டி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் சந்திரசேகர ராவின் காலில், கலெக்டர் சரத் விழுந்து வணங்கினார்.

இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதல்வர் காலில் விழுந்து வணங்குவதற்கு பல தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


SOURCE: NEWS TM

Post a Comment

0 Comments