திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முகத்துவாரம் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியதாக திருப்பாலைவனம் காவல்துறையினருக்கும் வருவாய்த்துறையினற்கும் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய அந்த பொருளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தம் அருகில் இருப்பதால் விண்வெளி ஆய்வுக்கு பயன்படுத்திய பொருளா அல்லது வேறு ஏதேனும் கப்பல்களில் இருந்து ஒதுங்கிய பொருளா அல்லது கடல் நில அதிர்வுகளை கண்டறியும் கருவியா என திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இதே போன்ற பொருள் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கதாகும். அந்தப் பொருள் கடல் நில அதிர்வினை கண்டறியும் கருவி எனவும் கப்பல்கள் மூலம் இழுத்து செல்லப்படும் போது அறுந்து கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் கூறப்படும் நிலையில் அதே போன்ற கருவியா இது எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.


0 Comments