• Breaking News

    கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ; கணவன் தற்கொலை முயற்சி

    பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ்,45. இவருக்கு, மனைவி சுனிதா, 39 மற்றும், 13 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த, 7 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சுனிதா, பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பகுதியில் உள்ள மிக்சர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இன்று(ஜன.,08) காலை தொழிற்சாலைக்கு வந்த செல்வராஜ் மனைவியை அழைத்து பேசியுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே தான் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை மனைவி கண்முன்னே தனக்குத்தானே ஊற்றி தீவைத்துகொண்டார்.



    உடலில் தீ பற்றி எரிந்த நிலையில் அலறியபடி ஆட்டோவில் ஏறி உள்ளார். இதனால் ஆட்டோவும் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அங்கே இருந்த பொதுமக்கள் ஓடி வந்து செல்வராஜை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.





    No comments