• Breaking News

    பெட்ரோல்,டீசல்,கியாஸ் நம்முடைய கையில் இல்லை - அண்ணாமலை பேட்டி

     திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், அவர்களின் ஒரே ஒரு சாதனை அனைத்து இடத்திலும் விலையை உயர்த்தியது தான். சொத்து வரி, ஆவின் பொருட்கள் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

    பழிபோடுவது மட்டுமே வாடிக்கையாக கொண்ட இந்த அரசு, செய்த தவறில் இருந்து பாடம் கற்காத அரசாக உள்ளது. இந்த அரசை கேள்வி கேட்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மத்திய அரசு கூறித்தான் மின் கட்டணத்தை உயர்த்தினோம் என்றார்கள். ஆனால் மத்திய அரசு கூறவில்லையே என்று விளக்கம் கேட்டதற்கு, மின் துறை அமைச்சர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அமைச்சர்களும், சில ஒப்பந்ததாரர்களும் பயன் அடையவே விலை உயர்த்தப்பட்டது.பெட்ரோல், டீசல், கியாஸ் நம்முடைய கையில் இல்லை. அது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது. அந்த விலை உயர்வுக்கும், மாநில அரசு உயர்த்தும் விலை உயர்வுக்கும் முடிச்சு போடக்கூடாது. பாஸ்போர்ட் ஊழல் தனிமனிதன் தொடர்பானது அல்ல. அது இந்திய இறையாண்மையை பாதிக்கக்கூடியது. இது தொடர்பாக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. மீது ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். நிச்சயமாக இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

    No comments