• Breaking News

    இலங்கை மக்களுக்கு ஓபிஎஸ் குடும்பம் ரூ.50 லட்சம் நிதியுதவி

     இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 50 லட்சம் ரூபாய் வழங்கினார்.

    இது தொடர்பாக அவர், தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதம்:'மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும்' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அப்போது, 'என் குடும்பத்தின் சார்பில், 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்' என, ஏப்., 29ல் அறிவித்தேன். அதன் அடிப்படையில், என் மூத்த மகனும், எம்.பி.,யுமான ரவீந்திர நாத் வங்கிக் கணக்கில் இருந்து, 25 லட்சம் ரூபாய்; என் இளைய மகன் ஜெயபிரதீப் கணக்கில் இருந்து, 25 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை அனுப்பி உள்ளேன். இதை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டை அளிக்கவும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    No comments