• Breaking News

    திருக்களம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் அமையவுள்ள எண்ணெய் தயாரிக்கும் ஆலைக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் திருக்களம்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் எண்ணெய் தயாரிக்கும் ஆலைக்கான பூமி பூஜை நடைபெற்றது.திருக்களம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் தொடங்க உள்ள எண்ணெய் தயாரிக்கும் ஆலைக்கான பூமி பூஜை விழா கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி முன்னிலையில் நடைபெற்றது.




    இப்பூமி பூஜை விழாவில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பழனிச்சாமி,கிராம நிர்வாக குழுத்தலைவர் உதயகுமார், ஒய்வு பெற்ற கிராமநிர்வாக அலுவலர் ஆறுமுகம்,  கூட்டுறவுசங்க துணைத்தலைவர் மணி, கூட்டுறவு சங்க இயக்குநர்கள் இராமச்சந்திரன்,இராம.கருப்பையா,சங்க செயலாளர் துரையரசன் , சங்க ஊழியர்கள் பெருமாள்,சதாசிவம்,ஒப்பந்தக்காரர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பூமி பூஜை விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

    செய்தியாளர் இரா.பாஸ்கர்

    No comments