இலுப்பூர் டிஎஸ்பி டாக்டர்.காயத்ரி தலைமையில் காரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குற்றதடுப்பு விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1098 சைல்டு லைன் மற்றும் காவல்துறை இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
காரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு இலுப்பூர் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் டாக்டர்.காயத்ரி தலைமையில் 1098 சைல்டு லைன் பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி முன்னிலையில் குழந்தைகளிடையே பேசிய டிஎஸ்பி காயத்ரி குழந்தைகளுக்கான சுய பாதுகாப்பு, தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது,பெண்கள் பாதுகாப்பு எண்கள்181 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098, பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடையே டிஎஸ்பி காயத்ரி விளக்கி கூறினார்.இந்நிகழ்வில் அப்பள்ளி ஆசிரியர்கள்,காரையூர் காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments