ஏனாதி கிராமத்தில் பொது வினியோக அங்காடி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சியில் பொது வினியோக அங்காடி புதிய கட்டிடத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.
பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் நடைபெற்ற பொது வினியோக அங்காடி புதிய கட்டிட திறப்பு விழா மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் (பொ) தனலெட்சுமி முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பொது வினியோக அங்காடி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து கிராம மக்களிடையே சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வில் இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் குழந்தைசாமி,மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ், ஒன்றியப்பெரும் தலைவர் சுதா அடைக்கலமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதாசிவம், தங்கராஜீ, நகரச் செயலாளர் அழகப்பன், கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் இரா.பாஸ்கர்
No comments