• Breaking News

    பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை முகாம் நடைபெறுகிறது

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை முகாம் நாளை நடைபெறுகிறது. 

    பொன்னமராவதி வட்டாச்சியர் அலுவலகத்தில் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDID வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளிடம் புதிதாக விண்ணப்பம் பெறுவதற்கும் மற்றும் UDID அட்டை வேண்டி இது நாள் வரையில் விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் நாளை காலை பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாமில் கலந்து கொண்டு  மருத்துவர்களின் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு மாற்றுத்திறனாளிகளுக்கு தாசில்தார் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    செய்தியாளர் இரா.பாஸ்கர்

    No comments