7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மேற்சொன்ன 7 மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக 'ஆரஞ்சு' எச்சரிக்கை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
No comments