• Breaking News

    செவலூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. செவலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா முத்துக்குமார் தலைமையில் துணை தலைவர் சங்கர்,வட்டார ஒருங்கிணைப்பாளர் சித்ரா முன்னிலையில் தொடங்கிய கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பணிகள் பற்றியும், நடைபெற்று வரும் பணிகள் பற்றியும் விளக்கி கூறப்பட்டதுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் காவலர் ஆய்வாளர்,காவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் தலைமை ஆசிரியர்கள்,அங்காடி பணியாளர்கள்,மின்வாரிய துறையினர்,வனத்துறையினர், மக்கள்நலப்பணியாளர்,மகளிர் சுய உதவி குழுக்கள்,பணித்தளப் பொறுப்பாளர்கள்,தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இரா.பாஸ்கர் செய்தியாளர்

    No comments