வாராப்பூர் ஊராட்சியில் புதிய பள்ளிகட்டிட பூமி பூஜை விழா நடைபெற்றது
பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சியில் புதிய பள்ளிகட்டிட பூமி பூஜை விழா நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடர் மழையின் காரணமாக இப்பள்ளியின் உள்கட்டமைப்பு கட்டிடங்களில் முற்றிலும் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. இதுசம்மந்தமான சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பொறியாளர் குழுவினர் தலைமையில் ஆய்வு செய்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார்.மேலும் நோய் தொற்று காலம் என்பதால் மாணவ மாணவிகள் கல்வி பயில வருகை இல்லாமல் இருந்தது.
தற்சமயம் சமுதாய கூடத்ததிலும், நாடக மேடை வளாகத்திலும் வகுப்புகள் செயல்பட்டு வந்தது. முன்னதாக இப்பள்ளி கட்டிடம் செயல்பட்டு வந்தநிலையில் சுற்றுப்புறபகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வந்தனர்.இந்நிலையில் இக்கட்டிடம் சிதிலமடைந்த காரணத்தினால் இடிக்கப்பட்டதற்கு பிறகு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருகாமையில் உள்ள எஸ். புதூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி போன்ற பகுதிகளுக்கு சென்று கல்வி பயிலக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இப்பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவரும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர். சேதுராமன் பார்வைக்கு இத்தன்மை குறித்து வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் கொண்டு சென்றார். அதன் அடிப்படையில் இன்நிறுவனத்தின் சார்பாக சுமார் ஒரு கோடியே 30 லட்சம் நிதி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் சேதுராமன் டாக்டர் குரு சங்கர் மனைவி காமினி, சந்திரசேகர், மீனாட்சி மிஷன் பொறியாளர் கோபால், ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன், கட்டிட பொறியாளர் வி. என்.ஆர் நாகராஜன், தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை அரசு அதிகாரிகள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள், என பலர் கலந்து கொண்டனர்.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments