கண்டியாநத்தம் ஊராட்சியில் உள்ளாட்சி தின விழாவையொட்டி கிராம சபைக் கூட்டம் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களை பாராட்டி பாராட்டு நற்சான்றிதல் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதல் வழங்கப்பட்டது.கண்டியாநத்தம் ஊராட்சியில் உள்ளாட்சி தினவிழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் நடத்தப்பட்ட கிராம சபைக்கூட்டம் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது விழா ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது.
இதில் கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பணித்தளப்பொருப்பாளர்கள், குடிநீர்தொட்டி இயக்குபவர்கள் ஆகியோரின் பணியை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிட்டம், கலைஞர் வீட்டுவசதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், வடகிழக்குப்பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் ஊராட்சி செயலர் அழகப்பன் தீர்மானங்கள் வாசித்தார்.இந்நிகழ்வில் துணைத்தலைவர் ரோஜாபாணு, வார்டுஉறுப்பினர்கள் அழகப்பன், தியாகராஜன்,சரோஜாதேவி,சதீஷ்குமார், மகபத்நிஷா,பற்றாளர் நாகராஜன், கிராமநிர்வாக அலுவலர் ராஜேந்திரன், சைல்டு லைன் களப்பணியாளர் பூங்கொடி, வனத்துறை வித்யா, தலைமையாசிரியர் சுபத்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments