உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அறந்தாங்கியில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய அமைச்சர் ரகுபதி

தமிழகம் முழுவதும் திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர கழகத்தின் சார்பாக குரும்பூர் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை உணவு வழங்கினார்.அதனை தொடர்ந்து  அறந்தாங்கி அண்ணா சிலை மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் மதிய உணவு வழங்கி சிறப்பித்தனர்.இந்த நிகழ்ச்சியானது அறந்தாங்கி நகர கழக செயலாளர் ராஜேந்திரன்  தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர் RRK .கலைமணி மற்றும் மணமேல்குடி ஒன்றய துணை பெருந்தலைவர் SM.சீனியார் பொதுக்குழு உறுப்பினர் வீரையா  முன்னால் நகர மன்ற தலைவர் பழ மாரியப்பன்,நகர அவைத்தலைவர் ஆ.சுப்பிரமணியன், நகர துணை செயலாளர்கள் K.V.ராமசாமி,G.M.R.அனுராதஇராஜேந்திரன்,எஸ்.அருளாந்து, நகர பொருளாளர் த.அனந்தராமன், மாவட்ட பிரதிநிதிகள் P.ராவுத்தர்கனி,ஆ.கார்த்திகேயன்,நகர் மன்ற உறுப்பினர்கள் சித்ரா சக்திவேல்,காசிநாதன்,பழனி மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஹரி விமலாதி,நகர இளைஞரணி அமைப்பாளர் சேக் இஸ்மாயில்  மற்றும் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments