கடலூரில் போலீஸ்காரரை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி சிவராமன் நகர் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய குற்றப்பிரிவில் வேலை பார்த்த போது பிரகாஷுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான 29 வயதுடைய பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.தற்போது அந்த பெண் சங்கராபுரத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அருகே பாதுகாப்பு பணிக்காக சென்ற பிரகாஷ் அந்த பெண்ணை சந்தித்து பேசியது குறித்து யாரோ அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பெண்ணின் கணவர் செல்போன் மூலம் பிரகாஷை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பிரகாஷ் வேலை முடிந்து நெய்வேலிக்கு சென்று அந்த பெண்ணின் கணவரை தாக்கி தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பிரகாஷை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் பிரகாஷ் மீது வழக்குப்பதிந்து அவரை மீட்டனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments