உறவினர்களால் முக்கிய சொத்துக்களை விற்க தயாராகும் சசிகலா?
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள பிரபலமான சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை சசிகலா 1000 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு அம்மா ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த இளவரசி, சசிகலா உள்ளிட்ட பலர் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பல்வேறு சொத்துக்களை வளைத்து போட்டதாக புகார்கள் எழுந்தது. இருப்பினும் அந்த சமயத்தில் அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் பெரிதாக கண்டு கொள்ளப் படவில்லை. அதன் பிறகு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பல பினாமிகள் இருந்ததாக நீதிபதி குன்ஹா தன்னுடைய தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்ததாக கலைஞர் வெளியிட்ட அறிக்கையில் இருந்துள்ளது.
இந்நிலையில் ஹாட் வீல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரை ஜாஸ் வீல்ஸ் என்று பெயர் மாற்றம் செய்தது சசிகலா வாங்கியதாக கூறப்பட்டது. அதன்பிறகு சத்தியம் சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 600 கோடி முதல் 1000 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள 11 திரையரங்குகளை இளவரசி மற்றும் சசிகலா தங்களுடைய உறவினர்களை மிரட்டி வாங்க வலியுறுத்தியதாக செய்தியும் தற்போது வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் இருந்தவர்கள் தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார் எழுந்த நிலையில் தற்போது தியேட்டர்களை வாங்குவதில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு கலைஞர் கருணாநிதி அவர்கள் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சசிகலாவின் உறவினர்கள் எந்த தியேட்டரையும் விலை கொடுத்து வாங்கவில்லை எனவும், குத்தகைக்கு தான் எடுத்து உள்ளோம் என்றும் விளக்கம் கொடுத்தனர். அப்படிப்பட்ட சூழலில் 136 திரையரங்குகள் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. இந்நிலையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது ஜாஸ் சினிமாவை 1000 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்று கேட்டபோது சசிகலாவின் உறவினரான விவேக் வங்கியில் கடன் வாங்கியதாக கூறியிருந்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறையில் இருந்த சசிகலா வெளியே வந்த நிலையில், தன்னுடைய சொத்துக்கள் குறித்து விவேக்கிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததோடு, ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதும் தெரியவந்தது. இதன் காரணமாக சசிகலா ஆசை ஆசையாய் வாங்கிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். ஒருவேளை சொத்துக்களை விற்பனை செய்யாவிட்டால் மீண்டும் வருமானவரி துறையினர் சோதனையில் மாட்டிக்கொள்வோம் என்று சசிகலா நினைக்கிறாராம். மேலும் விற்பனை செய்த நிறுவனமே தற்போது வாங்குவதற்கு முன் வந்ததால் அந்த நிறுவனத்திடமே சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் உறவினர்கள் கூறி வருத்தப்படுகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments