• Breaking News

    பால் மற்றும் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடியில் பால் விலை,சொத்து வரி மற்றும் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி  நாகுடியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்பாட்டம் பாஜக அறந்தாங்கி ஒன்றியதலைவர் பழ. சக்திவேல்  தலைமையில் நடைபெற்றது.ஒன்றிய பொதுச் செயலாளர் பெரிய கிருஷ்ணன் வடிவேல், துணைத் தலைவர் பாலமுருகன், பொருளாளர் பரமசிவம். முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கண்டன உரையாக மாவட்ட பொருளாளர் அம்பாள் சுகன்யா மற்றும் மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் பாண்டியராஜன் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகுடி செல்வராஜ் ஆகியோர் திமுக அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பாஜக தலைவர் செல்வம் அழகப்பன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் நாகுடி கடை வீதியில் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    No comments