எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் ஊராட்சி தினத்தையொட்டு ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.வாராப்பூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தினத்தை அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும். ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்கள், சுய உதவிக் குழுக்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது.
மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் ,ஜல் ஜீவன் மக்கள் திட்டமிடல், வடகிழக்கு பருவமழை, இணைய வழிவீட்டு வரி ,சொத்து வரி, செலுத்துதல் .சுகாதாரம் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் மக்கள் நில ஆய்வு ஆகியவைகள் பற்றி விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய பற்றாளராக பெரியய்யா, துணைத்தலைவர் சித்ரா,வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ,கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலந்து சிறப்பித்த அனைவருக்கும் ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி தெரிவித்துக் கொண்டார்.இதில் ஊரட்சிப் பணியாளர்கள், பொது மக்களுக்கும்.ஊராட்சி தலைவர் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments