சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த வருடம் காதல் திருமணம் செய்துகொண்டார். ரகசியமாக திருப்பதியில் நடந்த அவர்களது திருமணத்தின் போட்டோ லீக் ஆன பிறகு தான் அது எல்லோருக்கும் தெரியவந்தது.
ரவீந்தர் தயாரிப்பாளர் என்பதால் தான் மஹாலக்ஷ்மி திருமணம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார், பணத்திற்காக தான் இதெல்லாம்.. என பல விமர்சனங்கள் வந்தது. அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இருவரும் பேட்டி கொடுத்தனர்.மஹாலக்ஷ்மி சீரியலில் நடிப்பது மட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் influencer ஆக பல பொருட்களின் விளம்பரங்களை செய்து வருகிறார். சமீபத்தில் அவர் நைட்டி பிராண்ட் விளம்பரத்துக்காக தனது படுக்கையறையில் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருந்தார்.
அந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் சிலர் மோசமான கேள்விகளையும் கமெண்டில் கேட்டிருக்கிறார்கள். 'எப்போ நல்ல செய்தி சொல்ல போறீங்க' என்பது தான் அந்த கேள்வி.


0 Comments