• Breaking News

    அந்த மாதிரி விசயத்திற்கும் நினைத்து வருவார்கள்- நடிகை தேவிப்பிரியா



    90களில் சினிமா, அதன் பின் சீரியல் என தனித்துவமான நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் தேவிப்பிரியா. இன்னும் சீரியல் வில்லி பாத்திரம் என்றாலே தேவிப்பிரியா தான் . சின்னத்திரை, வெள்ளித்திரையில் தான் சந்தித்த அனுபவங்களை இணையதளம் ஒன்றுக்கு பகிர்ந்துள்ளார் தேவிப்பிரியா, இதோ அந்த பேட்டி:

    என்னுடைய குடும்பத்தில் யாருமே சினிமா சம்மந்தப்பட்டவர்கள் இல்லை. படித்துக் கொண்டே வேலை செய்யும் சூழல். அப்போது கேட்டரிங் படிக்க ஆரம்பித்தேன். அப்போது, டாக்குமெண்ட்ரி வாய்ப்பு வந்தது. கிராமத்தில் அழகாக இருந்தது அந்த பயணம். அது தான் சினிமாவின் முகப்பு.

    நிறைய சீரியல்களில் நடித்தேன். சின்னத்திரை ஜோதிகா என்று தான் அழைத்தார்கள். உயிரோடு உயிராக, வாலி ஆகிய படங்களில் நடித்த பிறகு அஜித் சாரை சந்திக்க அவருடைய அலுவலகத்திற்கு சென்றேன். எல்லாரும் என்னை ஜோதிகா என நினைத்து, ‘சோனா… சோனா…’ என கிசுகிசுத்துக் கொண்டார்கள். அதுவே கொஞ்ச நாள் கழித்து, சின்னத்துரை சினேகா என்று கூறிவிட்டார்கள்.

    வாலி பண்ணும் போது, அஜித் சார் உச்சத்தில் இருந்தார். அப்போ படப்படிப்பின்போது, ‘ப்ரியா… படங்களில் கவனம் செலுத்துங்கள், சீரியல்களில் இறங்கிவிடாதீங்க’ என அஜித் எனக்கு அறிவுரை வழங்கினார். அதோட சீரியஸ்னஸ் எனக்கு தெரியவில்லை. தல சொல்லி கேட்காமல் போய்விட்டேன். அவர் சொன்னதை செய்திருந்தால், நானும் பிரபல நடிகையாக இருந்திருப்பேன்.

    நாங்கள் நடிக்கும் காலத்தில், தேவைகளின் அடிப்படையில் தான் வாய்ப்புகள் தருவார்கள். நான் வாய்ப்புகளை தேடி போகவில்லை, அதனால் எனக்கு அந்த பிரச்னை இல்லை. ஆனால், தேடிவந்த வாய்ப்புகளில், என்னையும் அதற்கு கேட்டார்கள்.


    எனக்கு தொந்தரவே இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால், அது நாகரீகமான அப்ரோச்சாக இருக்கும். விருப்பம் இருந்தால் என்று கேட்பார்கள், இல்லை என்றால், வேலை கிடைக்காது, அவ்வளவு தான்.

    ஒரு பெரிய ப்ராண்ட் விளம்பரத்திற்கு வருவார்கள். வரும் போதே, நம்மை அந்த மாதிரி விசயத்திற்கும் நினைத்து வருவார்கள். நான் நேரடியாகவே முடியாது என்பேன். அந்த மாதிரி நிறைய வாய்ப்புகள் போச்சு. எனக்கு மட்டுமல்ல, சின்னத்திரை, வெள்ளித்திரையில் இருந்த பெரிய நடிகைகளுக்கு இது நடந்து, மறுத்ததால் காணாமல் போய்விடுவார்கள்.

    நான் கடைசி வரை வில்லியாகவே வாழ்ந்துவிட்டேன். மதுரைக்கார பெண் என்பதால், இயல்பாகவே என்னை வில்லியாக தேர்ந்தெடுத்துவிட்டார்கள். ராதிகா மேடம் தான் என்னை வில்லியாக தேர்வு செய்தார்கள். அதன் பின் எனக்கு கிடைத்தது எல்லாமே வில்லி தான்.

    நான் வில்லி என்பதால் என்னை வெளியில் யாரும் வெறுத்தது இல்லை. மகாநதி படத்தில் கமல் சாரின் பெரிய பெண்ணாக விபச்சார விடுதியில் இருக்கும் கதாபாத்திரம் எனக்கு தான் முதலில் வந்தது. நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அதை தவிர்த்தது இன்றும் எனக்கு பெரிய ஏக்கம். வாழ்க்கையில் தவற விட்ட பெரிய வாய்ப்பு இது.

    No comments