மூங்கில்பட்டி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் அந்தியூர் எம்.எல்.ஏ மாணவ,மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கினார்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி , மூங்கில்பட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் மூலம் செயல்படுத்தபட்டு திட்டங்கள் குறித்து மாணவ மாணவியர் மத்தியில் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிதம்பரம் ,மூங்கில்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் , முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் பழனிச்சாமி, விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments