நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படம் இன்று வெளியானதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கட் அவுட், மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து நடனம் என திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இதேபோன்ற கொண்டாட்டத்தையும் திருச்சியிலும் ரஜினி ரசிகர்கள் செய்திருக்கிறார்கள். இதோடு இவர்கள் செய்திருக்கும் மற்றொரு செயலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். ’லால் சலாம்’ என்ற படத்தின் தலைப்பிற்கு ஏற்ப சிவப்பு நிறக் கொடியில் மஞ்சள் நிற வட்டத்திற்குள் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை அச்சிட்டு அதைச் சுற்றி ‘சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்’ எனும் வாக்கியத்தை அச்சிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment