செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த செண்பகச்சேரியில் லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் வராஹி கோவிலில்  கும்பாபிஷேகமாகி ஓராண்டு ஆனதை  முன்னிட்டு சம்வஸ்த்ரா அபிஷேகம் நடந்தது.இதனை முன்னிட்டு ஹோமபூஜைகள் நடைபெற்று பூர்ணாஹுதி நடந்தது.பின்னர் கடம் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டது.முன்னதாக பால் குடங்கள் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து கணபதி,லட்சுமி நரசிம்மர்,வாராஹி அம்மன்,கருடாழ்வார் உள்ளிட்ட பரிவரா தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஆலய நிர்வாகி  செந்தில்குமார் மற்றும் செண்பகச்சேரி கிராமவாசிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments