• Breaking News

    சென்னையில் புதிதாக வீடு கட்டி வரும் முதியவரிடம் ரூ.2 லட்சம் கேட்டு 'கன்னத்தில் பளார் விட்ட திமுக பிரமுகர்கள்'

     


    நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’ படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் புதிதாக வீடுகட்டும் முதியவரை பணம் கேட்டு மிரட்டுவது போல காட்சிகள் அமைந்திருக்கும். அதுபோல் தற்போது சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

    ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மண்ணு ரமணய்யா(74). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு 11வது பிரதான சாலையில் 15 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார்.தற்போது கட்டிடம் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில், 188-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம் என்பவர் தனது ஆதரவாளர்களான திமுக பிரமுகர் விமல் உள்ளிட்ட சிலருடன் ரமண்ணய்யாவிடம் சென்று, ஆந்திராவில் இருந்து வந்து வீடு கட்டுவ? பணம் கேட்டால் தரமாட்டியா என கூறி 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி முதியவரை கன்னத்தில் தாக்கியுள்ளனர்.

    ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த ரமணய்யா இதில் நிலைக்குலைந்ததை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை‌மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்துள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட முதியவர், திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த பகுதிகளில் புதிதாக வீடுகட்டும் நபர்களை குறிவைத்து சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    No comments