மதுரை: இடிந்து விழுந்த சுகாதார நிலையத்தின் மேற்கூரை..... தடுப்பூசி போட வந்த மூதாட்டி தலையில் பலத்த காயம்....
மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவியும், இரண்டு வயது பெண் குழந்தையும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளது. விமலாவின் தாயார் போதுமணி (57). இன்று மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது இரண்டு பேத்திகளை தடுப்பு ஊசி போட அழைத்து வந்துள்ளார்.அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் மேற்கூரை பூச்சு விழாததால் போதுமணி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த இரண்டு வயது மற்றும் இரண்டு மாத பெண் குழந்தைகள் நல்வாய்ப்பாக காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து உரிய ஆய்வு நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments