• Breaking News

    அறந்தாங்கி அருகே திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்கள்...... உட்கட்சி பூசல் காரணமா....?


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமரடக்கி கிராமத்தில் திமுகவினர் இரண்டு பிரிவுகளாக நேற்று முன்தினம் தண்ணீர் பந்தல் திறந்துள்ளனர்.இதனை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் ஆவுடையார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்துரை ஆகியோர்  திறந்து வைத்துள்ளனர்.

    இந்நிலையில் அதில் நெசவாளர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்ததற்கு அந்த பகுதியில் உள்ள மற்றொரு பிரிவு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த தண்ணீர் பந்தலை அகற்ற வேண்டும் என அந்த பகுதியைச் சேர்ந்த திமுகவின் மற்றொரு பிரிவினர் பிரச்சினை செய்ததால் அதனை வேறொரு இடத்திற்கு நேற்று மாற்றி உள்ளனர்.

    மாவட்ட கவுன்சிலர் ராமநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட அந்த தண்ணீர் பந்தல் நேற்று இரவு மர்ம நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது.இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தண்ணீர் பந்தல் அமைத்த திமுகவினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

    அப்போது ஐந்து நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு தண்ணீர் பந்தலை நோக்கி நள்ளிரவில் வருவதும் பின்பு தண்ணீர் பந்தலை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது.

    இதனையடுத்து அந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் மாவட்ட கவுன்சிலர் ராமநாதன் இதுகுறித்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திமுகவினர் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை முகமூடி அணிந்த நபர்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவமும் திமுகவினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படும் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    No comments