கும்மிடிப்பூண்டி: சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த செவ்வாய் அன்று காலை 6 மணி அளவில் கோ பூஜை கணபதி பூஜை வாஸ்து சாந்தி மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து புதன்கிழமை அன்று காலை 5 மணி அளவில் கங்கா பூஜை நாடி சந்தனம் நடைபெற்ற பின்னர் கடன் புறப்பாடு நடைபெற்றது அது தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் ஸ்ரீ பாலமுருகன் சுவாமி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் தீபாரதனை அன்னதான பிரசாத விநியோகம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு புரோகியர்களால் பூஜிக்கப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்தின் மீது தெளிக்கப்பட்ட பின்னர் காத்திருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிரிஜா தனபால் மோகன்ராஜ் கவிதா மோகன்ராஜ் ராமச்சந்திரன் தேவி ராமச்சந்திரன் ஆகியோருடன் கிராமப் பெரியோர்கள் செய்திருந்தனர். கோவில் நிர்வாகி சார்பில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
No comments