• Breaking News

    முன்னாள் மாணவர்கள் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மறுசந்திப்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  கே. எல்.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த  முன்னாள் மாணவர்கள் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மறுசந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த  10,12 வகுப்பு பொது தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சொந்த செலவில் வகுப்பறைகளை வண்ணம் பூசியும் புது மின்விசிறிகளை வாங்கி தந்து பள்ளிக்கு அர்ப்பணித்தனர் பின்னர் முன்னாள் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து புகைப்படம் செல்பி எடுத்துக்கொண்டு அவர்களின் குழந்தை பருவங்களைப் பற்றி பேசியும் நினைவூட்டி மகிழ்ந்தனர்.

    முன்னாள் மாணவர்களுக்கு அனைவருக்கும் கேடயம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சி முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்பு குழு சிறப்பாக செய்திருந்தனர் அனைவருக்கும் அறுசுவை  உணவு வழங்கப்பட்டது.

    No comments