• Breaking News

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறுவாபுரியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்


    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.அவருக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமையில் திருக்கோவிலின் சார்பில் திருவள்ளூர் இணை ஆணையர் அனிதா உதவி ஆணையர் சிவஞானம்,திருக்கோவிலின் செயல் அலுவலர் மாதவன், கோவிலின் அர்ச்சகர் ஆனந்தன் குருக்கள் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


     விநாயகரை தரிசனம் செய்த பின்னர் மூலவரை தரிசனம் செய்தார்.பின்னர்,ஈஸ்வரன், வள்ளிமணவாளன்,அம்பாள், ஆதிமூலவர்,பைரவர் ஆகியோரை தரிசனம் செய்தார்.  இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் உறுப்பினர் லட்சுமி நாராயணன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் கோவில் ஊழியர்கள் சுப்பிரமணி.சுதாகர், நடராஜ் ரோஸ், மனோஜ் ,காவல்துறை அதிகாரிகள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



    No comments